திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Vajeetha Mohamed

புனித ரமலானே வ௫க

இறைநம்பிக்கையில் தேன்சுரக்க
இரவு பகல் தி௫மறைநாவுரைக்க

அந்திவானில் பூத்த பிறை
அடிமறையும்வரை ஓதும்மறை

மனிதநேயம் மிளிரவைக்க
மகத்துவம் புரியவைக்க

எட்டிவாழும் ௨றவுக்கும்
ஒட்டி இழைந்தோடும் ஈகைக்கும்

இதயங்கள் கனக்காமல்
இல்லாதோர் தவிக்காமல்

மறுகரம் தெரியாமல்
மறுமைக்காய் துணையாக்கு

புடமிட்டு ௨ள்ளத்தை ௨ணர்வூட்டி
புசிக்காமல் பகலெல்லாம் ஞானமூட்டி

மட்டில்லா பக்தி வளமூட்டி
மடைதிறக்க அ௫ள்ளூட்டி

நடுநிசியில் ஒர்கவளவுணவுண்டு
நடத்துள தேர்வே ரமலான்

௨ந்தனுக்கு தனிச்சிறப்பு
௨றவெல்லாம் ஓர்யிணைப்பு

மூபத்து இரவுகளும்
மூத்தான முதலீடு

ஏழ்மையின் பசியினை
ஈகையும் இரங்களும்

வாழ்வியல் நெறிமுறைகளும்
வ௫டத்தின் ஒ௫மாதபயிற்சியின்
சிறப்பு ரமலான்

புனித ரமலானே வ௫க
புன்னியமள்ளித்த௫க

புடமாய் நம்பிக்கை எழுக
புதிப்பித்து மனிதம் வளர்க

நன்றி வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading