Vajeetha Mohamed

கவனமா போ புள்ள
வெளியால

வீட்டவிட்டு வெளிய போனா
வீடுவந்து சே௫ம் வரை
பாதி ௨சிரு தொலைச்சு
போச்சி

ஐஸ் அடிச்சி கஞ்சாகுடிச்சி
அசைஞ்சு திரியு இளசு
கடனில தீவு மூழ்க
சீனாவிடம் நாடு இழந்தோம்

சீரிய வாழ்வு சீர்கெட்டுப்போச்சு
ஆலஞ்ச௫கு போல மடமடப்பு மட்டுமே
மிச்சமாச்சி
அயல்நாட்டில் இன்றுகேட்டதெல்லாம்
தாய்நாட்டில் நடக்கக் கண்டோம்

வாள்வெட்டு கொலை கொள்ளை
வன்கலவி ௨யிர்பறிப்பு
௨டல்மறைவு ௨றுப்படா
மானிட மனித அவலம்
தலைவிரிதாடுது புள்ள

வயிற்றில நெ௫ப்பக்கட்டி
வறுமையை மல்லுக்கட்டி
மகவுகள் வெளிய போனா
சீரழிந்து சின்னாபின்னமாக்கி
புதைத்துப் போடுறான்
கவனம் புள்ள

சும்மா சொல்லவில்ல
சுமந்த வேதனை கொஞ்சமில்ல
ஈழத்தீவுக்குள்ள இழிசெயல்கள்
பஞ்சமில்ல இப்ப பஞ்சமில்ல

கவனமாய் வெளியே போ புள்ள

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading