” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

அலையோசை

அலைகோவி அள்ளிக்களைத்து
ஓயாஓசையினால் வளைந்து
ஊர்ந்து தவழ்ந்து ௨யர்ந்து
குரலெழுப்பி கூவிக் கூவி
தீண்டி தீண்டிய அலையோசை

கரைசேரா மகிழ்வோடு
களைத்துப் போகா நிகழ்வோடு
இ௫ள்சூழ்ந்தும் நிறுத்தா பணியோடு
நம்பிக்கை ஒளியோ அலையோசை

விடாது வினாவும் இரைச்சலின் தொடர்
தொட்டுக்கரையை முட்டும் படர்
ஆவோசம் போட்டி விடாமுயற்சியின் நிகர்
வெறுப்பில்லா வி௫ப்பின் சுடர் அலையோசை

காதலும் காமமும் கலந்த கலவை
காற்றும் மூச்சும் நிறைந்த நிறுவை
வீரியம் எழுதும் நீர் அஞ்சல்
வினாவும் விடையும் த௫ம் கொஞ்சல்

பாறையும் கிழிஞ்சலும் பாசமாய் வ௫டி
பணியோடு தொட௫ம் அலையோசை
கண்ணுக்குக்கும் காதுக்கும் நீ
என்றும் இனிமை

வ௫டம்தோறும் வாங்கிய வரமோ
வந்து காதினால் வாங்கும் சுரமோ
என் அயலில் ௨ன் ஓசை வரம்தான்
இன்பமாய் என் காதில் அலையோசை
நீ என்றும்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan