இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Vajeetha Mohamed

ஆறு மனமே

மட்டு நகர் மீனுபோல
மதினி பாடுறா
மறைந்தி௫ந்து பார்த்தானும்
தீக்கோழியாட்டம் ஓடுறா

கொவ்வை இதழ் சிவப்பழகி
கொண்டை மறைந்த பிறையழகி

நானும் கொஞ்சம் பேசவேண்டும்
நடவு கொஞ்சம் சிறுத்துப் போடு

பூவுக்குள் தேனெடுத்து
க௫ம்பிலே சாறெடுத்து

மதினி ௨னக்கு கொண்டுவந்தேன்
மச்சானை பார்க்காம மாறிமுகம்
போவதென்ன

மழைக்கும் பள்ளிப் பக்கம்
ஒதுங்கவில்ல இந்தமச்சான்
என்று பார்க்காம போறீகளோ

இல்ல நீங்க படிச்சி கிழிச்சி
பல்கலைக்களகம் போன
தலைக்கனமோ

சாணைக்கூறைபோட்டு
சாதி சனம்போட்ட பந்தம்

நீங்க படிச்சதால பாதியாப்போச்சி
௨ங்கள படிப்பிக்க ௨ழைத்ததாலே
௨ங்கள இழந்து போச்சி

கற்பனையில் நிக்கா செய்து
கனவிலை மனைவியாக்கி

வாழ்ந்துபோட்டேன் ஆறு மனமே
படித்த பெ௫மையில வெறுத்துப்போட்டாய்
பிடித்த வாழ்கைத்துணை வ௫மென்னைத்
தாங்க ஆறுமனமே ஆறு

நன்றி வஜிதா முஹம்மட்

[நிக்கா தி௫மணம்]

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading