அது அந்தக்காலம் இது இந்தக்காலம்

ஜெயம்

இயற்கையோடு உறவாடி இயற்கையாக வாழ்ந்தது அந்தக்காலம்
செயற்கையை நுழைத்து உண்மையாய் செயற்படாமல் வாழ்வது இந்தக்காலம்
மனித சக்தியால் உழைத்து நீடூழி வாழ்ந்தது அந்தக்காலம்
இயந்திரத்தின் கடுகதிக்குள் சிக்கி சீரழிந்து வாழ்வது இந்தக்காலம்

நூலகம் தேடிச்சென்று ஞாபகப்படுத்தும் அறிவைப்பெற்றது அந்தக்காலம்
இணையவழியாக விழியினைக்கெடுத்து அறிவை அடைவது இந்தக்காலம்

சொந்தம் பந்தமென கூடிய கூட்டு வாழ்க்கை அந்தக்காலம்
தனிமையும் வெறுமையும் துணையாக தவிச்சு வாழுவது இந்தக்காலம்
காதலையும் மானத்தையும் உயிராய் நினைத்தது அந்தக்காலம்
பணத்தை கண்டுவிட்டால் அலைபாயும் உறவுநிலை இந்தக்காலம்

வாழ்க்கை துணையை பெற்றோர் தேடுவார் அந்தக்காலம்
வாழ்க்கை துணைசொல்ல, பெற்றோர்கள் வாயோதிபமடத்தில் இந்தக்காலம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading