திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

“அன்பெனும் அகராதி”…

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரம்
கவி இலக்கம்- 2075!

அன்பெனும் அகராதி..

அழகழகான பக்கங்கள்
ஆழுமை நிறை பதிவுகள்
கூடிக் கழிக்கும் எழில்கள்
குன்றென நிமிரும் பண்புகள்

கரங்கோர்த்து ஆற்றுப்படுத்தும்
கண்ணீர் வரின் துடைத்துவிடும்
ஈவது சிறப்பென உணர்த்திவிடும்
இல்லாமை போக்க உதவிவிடும்

பெருமை பாராட்டாது இது
பெற்றவர் போல் கூடவே வரும்
விழும்போது கைப்பிடித்து எழ
விசை கொண்டு அமைதி பேணுமே

வயது பேதமை இதற்கில்லை
வறுமை செல்வம் பிரிவுமில்லை
இறுமாப்பு கொண்டு அலைவதில்லை
உறுதியாய் நிலைக்குமே பண்பிலே..
சிவதர்சனி இராகவன்
18/12/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading