மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-260,
சீர்வரையறை:அறுசீர் விருத்தம்

தலைப்பு! “பணம்”
…………
குணத்தினைக் குப்பை என்றே
கூறிடும் பல்லோர் இங்கே
பணத்தினை நாடிச் செல்வார்
பகையினை வெல்வ தற்கே
கணத்தினில் பணத்தைத் தேடக்
கடிந்துரை நல்கிச் செல்வார்
பணத்தினை நீயும் ஈட்டி
பாரினில் வாழ்க நன்றே!.

பண்டைய நாளி லெல்லாம்
பண்டமே மாற்றிக் கொள்வார்
உண்டிட உடுத்தற் தெல்லாம்
உரியதைப் பெற்றுக் கொள்வார்
கண்டிடார் பணமே என்றால்
கண்டிடார் உறவ ரெல்லாம்
அண்டியே வருவார் செல்வம்
அடைந்திடில் நீயென் றாலே!

. உறவுகள் பணத்தை வைத்தே
உனையெடை போடல் காண்பாய்!
திறமுடன் உழைத்தே வெல்வாய்!
தீதறப் பணத்தைச் சேர்ப்பாய்!
அறத்தினில் ஓங்கி நிற்பாய்
அடுத்தவர்க் கீந்தே வாழ்வாய்!
மறத்தமிழ் ஈழம் மீட்க
மண்மிசை பணத்தால் வெல்வாய்!

– கவிஞர் அபிராமி கவிதாசன்
09.04.2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading