பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-260,
சீர்வரையறை:அறுசீர் விருத்தம்

தலைப்பு! “பணம்”
…………
குணத்தினைக் குப்பை என்றே
கூறிடும் பல்லோர் இங்கே
பணத்தினை நாடிச் செல்வார்
பகையினை வெல்வ தற்கே
கணத்தினில் பணத்தைத் தேடக்
கடிந்துரை நல்கிச் செல்வார்
பணத்தினை நீயும் ஈட்டி
பாரினில் வாழ்க நன்றே!.

பண்டைய நாளி லெல்லாம்
பண்டமே மாற்றிக் கொள்வார்
உண்டிட உடுத்தற் தெல்லாம்
உரியதைப் பெற்றுக் கொள்வார்
கண்டிடார் பணமே என்றால்
கண்டிடார் உறவ ரெல்லாம்
அண்டியே வருவார் செல்வம்
அடைந்திடில் நீயென் றாலே!

. உறவுகள் பணத்தை வைத்தே
உனையெடை போடல் காண்பாய்!
திறமுடன் உழைத்தே வெல்வாய்!
தீதறப் பணத்தைச் சேர்ப்பாய்!
அறத்தினில் ஓங்கி நிற்பாய்
அடுத்தவர்க் கீந்தே வாழ்வாய்!
மறத்தமிழ் ஈழம் மீட்க
மண்மிசை பணத்தால் வெல்வாய்!

– கவிஞர் அபிராமி கவிதாசன்
09.04.2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading