” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-260,
சீர்வரையறை:அறுசீர் விருத்தம்

தலைப்பு! “பணம்”
…………
குணத்தினைக் குப்பை என்றே
கூறிடும் பல்லோர் இங்கே
பணத்தினை நாடிச் செல்வார்
பகையினை வெல்வ தற்கே
கணத்தினில் பணத்தைத் தேடக்
கடிந்துரை நல்கிச் செல்வார்
பணத்தினை நீயும் ஈட்டி
பாரினில் வாழ்க நன்றே!.

பண்டைய நாளி லெல்லாம்
பண்டமே மாற்றிக் கொள்வார்
உண்டிட உடுத்தற் தெல்லாம்
உரியதைப் பெற்றுக் கொள்வார்
கண்டிடார் பணமே என்றால்
கண்டிடார் உறவ ரெல்லாம்
அண்டியே வருவார் செல்வம்
அடைந்திடில் நீயென் றாலே!

. உறவுகள் பணத்தை வைத்தே
உனையெடை போடல் காண்பாய்!
திறமுடன் உழைத்தே வெல்வாய்!
தீதறப் பணத்தைச் சேர்ப்பாய்!
அறத்தினில் ஓங்கி நிற்பாய்
அடுத்தவர்க் கீந்தே வாழ்வாய்!
மறத்தமிழ் ஈழம் மீட்க
மண்மிசை பணத்தால் வெல்வாய்!

– கவிஞர் அபிராமி கவிதாசன்
09.04.2024

Nada Mohan
Author: Nada Mohan