பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்…285.தலைப்பு!

அழியாத கோலம்
……………………

ஞாலம் முழுதும் எத்தனை கோலம்
காலம் தருமே புதிய பாடம்!
அழியாக் கோலம் ஏதும் உண்டா?
மொழிவாய் நீயும் மெய்மைக் கண்டா?

செயற்கை யாவும் மாயக் கோலம்
இயற்கை போடும் எண்ணிலாக் கோலம்!
எதிலும் காண்பாய் உண்மை ஆழம்
புதுமை பூக்கும் அழியாக் கோலம்!

உலகில் அழிவின் பெரும்போர்க் கோலம்
நிலத்தில் அணுப்போர் சூழும் காலம்!
நீயா நானா? என்ற கேள்வி
நிகழ்த்தும் அதுவே அறிவின் வேள்வி

தாயாய் மகவாய் அலையும் கோலம்
தரணியில் அதுவா அழியாக் கோலம்?
மாயா உலகில் எல்லாம் கோலம்
மனத்தில் ஈழம் அழியாக் கோலம்!

மார்கழித் திங்கள் போடும் கோலம்
மாயக் கண்ணன் காதல் கோலம்!
தலைவர் போட்ட புரட்சிக் கோலம்
தமிழீ ழத்தின் கொள்கைக் கோலம்

மடந்தையர் வண்ணக் கிளியின் கோலம்
மாறி மலர்ந்தது புலியின் கோலம்!
பூமித் தாய்மேல்
எத்தனை கோலம்?
புலிகள் போட்டார் அழியாக் கோலம்!

.ஆசிரியர்:
.அபிராமி கவிதாசன்.
05.11.2024

Nada Mohan
Author: Nada Mohan