” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்…285.தலைப்பு!

அழியாத கோலம்
……………………

ஞாலம் முழுதும் எத்தனை கோலம்
காலம் தருமே புதிய பாடம்!
அழியாக் கோலம் ஏதும் உண்டா?
மொழிவாய் நீயும் மெய்மைக் கண்டா?

செயற்கை யாவும் மாயக் கோலம்
இயற்கை போடும் எண்ணிலாக் கோலம்!
எதிலும் காண்பாய் உண்மை ஆழம்
புதுமை பூக்கும் அழியாக் கோலம்!

உலகில் அழிவின் பெரும்போர்க் கோலம்
நிலத்தில் அணுப்போர் சூழும் காலம்!
நீயா நானா? என்ற கேள்வி
நிகழ்த்தும் அதுவே அறிவின் வேள்வி

தாயாய் மகவாய் அலையும் கோலம்
தரணியில் அதுவா அழியாக் கோலம்?
மாயா உலகில் எல்லாம் கோலம்
மனத்தில் ஈழம் அழியாக் கோலம்!

மார்கழித் திங்கள் போடும் கோலம்
மாயக் கண்ணன் காதல் கோலம்!
தலைவர் போட்ட புரட்சிக் கோலம்
தமிழீ ழத்தின் கொள்கைக் கோலம்

மடந்தையர் வண்ணக் கிளியின் கோலம்
மாறி மலர்ந்தது புலியின் கோலம்!
பூமித் தாய்மேல்
எத்தனை கோலம்?
புலிகள் போட்டார் அழியாக் கோலம்!

.ஆசிரியர்:
.அபிராமி கவிதாசன்.
05.11.2024

Nada Mohan
Author: Nada Mohan