பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஆக்கம் 329 விதியின் விளையாட்டு

ராணி சம்பந்தர் ஜெர்மனி

24.10.24
ஆக்கம் 329
விதியின் விளையாட்டு

விதியின் கெலி விளையாட்டு
யாருக்கும் புரியாத ஒன்று
சதியின் புலி வேட்டை
எவருக்கும் தெரியாது
இல்லை என்றும்

பதியின் பலிக் கூட்டில்
அலையும் உயிரும்
உருக்குலையும் உடலும்
வெறித்தனமானது
என்றென்றும்

இதுவோ முன்னால்
போனாலென்ன
பின்னால் வந்தாலென்ன
கண் மட்டும் திறந்தா
பார்க்கப் போகிறது

ஆகாயத்தில் கோட்டை
கட்டி பூமிக்குள் சாமியைக் கூட்டி
வைத்திடினும்
போகிற உயிர்
எவர் தடுத்திடினும்
நவரச நாடகத்தில்
முன்னுக்கோ அல்லது
பின்னுக்கோ போகத்தானே போகிறது.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan