பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

இயற்கையின் தாண்டவம்

Jeya Nadesan

கவிதை நேரம்-05.12.2024
கவி இலக்கம்-1960
இயற்கையின் தாண்டவம்
——————————
செங்கதிரோன் ஒளியாகி கடலில் தாழும்
காரிருளாக்கி மறைந்து செல்வான்
சேவல் கூவி கோயில் மணி எழுப்பும்
பொன் ஒளி வீச பொலிய வருவான்
பூமாதேவிக்கு சீர் கொண்டு வருவாள்
வானத்துப் பறவைகள் இசை கேட்டு
வாசனை அற்ற மரமாக காணும்
தேன் சேர்க்கும் வண்டுகள் ரீங்காரம்
இலையுதிர் மரங்களிடை களை அழகும்
பச்சைப் பசேலற்ற நெல் வயல்களும்
கொட்டும் மழையுடன் காற்றும் வீசும்
மேகம் இருளும் இடி மின்னல் முழங்கும்
தென்றல் காற்றும் வசந்தமும் வீசி வரும்
சூறாவளியும் பெரு வெள்ளமும் நிரப்பும்
மக்களின் வீடும் வயல்களும் நீர் பரப்பும்
மக்கள் நீரில் மூழ்கி இறப்பும் நடக்கும்
மண் சரிவும் வீடு அழிவும் உயிர்களும் சாகும்
இடப்பெயர்வு கோயில் பாடசாலை தஞ்சமாகும்
ஈழத்தாயின் இயற்கை வளங்களும் அளிந்தே போகும்

Nada Mohan
Author: Nada Mohan