பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

வியாழன் கவிதை …2195!!

உயிர்க்குமா சுவடுகள்!!

செம்மணி தன் வயிற்றுள்
செரிக்காது இருந்திட்ட
எம்மவர் உடலங்கள்
உலகின் முன் காட்சியாய்
சாட்சியமாய் இயம்பி விட்ட
சிப்பாய் தன் கூற்று
மெய்யாகிப் போனதே
உயிர் கொன்று போகுதே..

பிஞ்சுகள் தொட்டு
பள்ளிப் பிள்ளைகள் வரை
எத்தனை எத்தனை
மனம் பித்தென ஆகுதே
மனம் முற்றிய மனிதர்
ஆடிய பேயாட்டம்
காவு கொண்ட உடலம்
இன்னும் அகழ்வினில்
இதயத்தைக் கொல்லும்..

உலகின் முன்னே
நீதி தான் கேட்டார்
அணையா விளக்கு
போராட்டத்தை ஆக்கினார்
தொடர்கதை இதுவோ
தொல்லை விலகுதல் இல்லையோ
இறைவா நீயும் சும்மா
இருத்தல் தான் முறையோ..
சிவதர்சனி இராகவன்
21/8/2025

Nada Mohan
Author: Nada Mohan