பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஒரு வழி பாதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 226
ஒரு வழி பாதை

சொர்க்கமோ நரகமோ வாழ்க்கை
போகிறது ஒரு வழிப்பாதையாக
திரும்பிப் பார்க்கலாமே ஒழியே
நடக்க முடியாது திரும்பவும்

மலையில் உருவாகும் அருவி கூட
ஆறாகும் ஒரு வழிப்பாதையாய்
கடலில் கலந்தாலும் திரும்ப
வர முடியா ஒரு வழிப்பாதை

காதலும் சிலருக்கு ஒரு வழிப்பாதை
அதே வழிப்பாதையில் மரணமும்
செல்லும் தூரமோ வெகு அருகில்
நன்மை செய்து வாழ்வோமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan