பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஒரு வானொலி நேயரின் வாழ்த்தொலி

ஜெயம் தங்கராஜா

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
புதியதை புதுமையை மானிடன் படைத்தான்
வானொலி இல்லாமல் வளர்ச்சியும் இல்லையென
காற்றலை ஊக்கத்தை உண்டுபண்ணும் எல்லையென

புலத்தில் பூத்தது வானொலி ஒன்று
இலண்டன் தமிழ் வானொலி என்று
உண்மையில் நம்மவர்க்கு கிடைத்த பொக்கிஷம்
எண்ணங்களை கவர்ந்திழுத்து வைத்ததுவே தன்வசம்

உருவாக்கவென்று எம்மவரை ஆக்கிக்கொண்டு அன்று
இருபத்தெட்டு ஆண்டுகளை தொட்டுக்கொண்டது இன்று
தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி முடிவில்
எழிலான தொலைக்காட்சியென பாமுகம் வடிவில்

அயராது உழைத்திட்ட அதிபருக்கு வாழ்த்து
உயர்வான எண்ணங்கொண்ட நோக்கத்தையும் சேர்த்து
முயற்சிக்கும் பயிற்சிக்கும் வித்திட்ட தளமன்றோ
உயர்ந்ததே புலம்பெயர்விலும் நமது மொழிவளமன்றோ

ஜெயம்
12.06.2025

Nada Mohan
Author: Nada Mohan