16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஒளவை
நட்பு
———
உள்ளத்தை ஒழிக்காது
உண்மை உரைக்கவும்
பள்ளிக் காலத்தில்
பலதைப் பகிரவும்
கள்ளம் செய்தாலும்
காவலாய் நிற்கவும்
வெள்ளை மனதாய்
வேண்டும் நட்பு
உதிரத்தில் வேறாயினும்
உடன்வரும் சொந்தம்
பதிலேதும் கேட்காமல்
பாசத்தைக் காட்டிடும்
எதிலுமே துணையாய்
என்றென்றும் தொடரும்
நதிமூலம் ரிசிமூலம்
நட்புக்கும் இல்லை
கர்வத்தை உருவமாய்க்
கொண்ட துரியனும்
கர்ணனின் நட்பில்
கண்ணியம் காத்தான்
கண்ணனின் நட்போ
குசேலனின் தகுதியை
எண்ணத்தில் என்றும்
ஏற்றியே வைத்தது
சாதி மதங்கள்
சங்கடம் தரினும்
வீதிக்கு வீதி
வேற்றுமை இருப்பினும்
நாதி அற்றவனுக்கும்
நல்நட்புக் கிடைத்திடின்
சாதித்துக் காட்டிச்
சான்றாய் நிற்பான்.
ஔவை.
Author: Nada Mohan
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...