16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
ஒளவை
என்னவள்……
=============
அழகில் அவளை
அரசியாய்க் கண்டேன்
பழகியே அவளில்
பாசமும் கொண்டேன்
நிலவினைப் போல
நிம்மதி தந்தாள்
விலகிட முடியா
வீரமுடன் நின்றேன்
பருவ வயது
பளிச்சிடும் தேகம்
கருவிழி இரண்டும்
காதலைத் தூண்டும்
அருவியாய்ப் பாயும்
அவளது பார்வையில்
உருகியே வீழ்ந்தேன்
உண்மைக் காதலில்
அரும்பு மீசையில்
அலையும் இளசுகள்
தெருவோரம் நின்று
தேம்பியே பார்த்துக்
கருகிய காதலைக்
கண்ணீரால் மறைக்க
விரும்பியது கிடைத்த
வீராப்பு எனக்கு
மனதில் உன்னை
மனைவியாய் ஏற்றேன்
தினமும் காத்திடும்
தெய்வமாய் இருப்பேன்
மனையில் எனக்கு
மகாராணி நீயே
உனைத் தென்றல்
தீண்டவும் விடேன்.
ஒளவை.
Author: Nada Mohan
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...