ஒவ்வாமை 671 Selvi Nithianandan

Selvi Nithianandan

ஒவ்வாமை
சுட்டெரிக்கும் வெய்யிலும்
சுழன்றடிக்கும் காற்றும்
சுற்றுச்சுழல் மாசும்
சுழளும் ஒவ்வாமையும்
சுண்டித்தானே இழுக்குதே

சுகமாய் நானிருந்தும்
சுருண்டு போகையில்
சுதந்திர மழையும்
சுடர்விடும் திரிபோல
சிவக்குது கண்ணும்

மூச்சடைப்பு முகமெரிவு
இருமலுடன் தும்மல்
இதெல்லாம் தாண்டி
இடர்படும் கவலையும்
இப்படியே போகுது

ஓராண்டு வேலை
ஒருமாத காலம்
விடுமுறை மோகம்
விற்றமீனும் காணா
விடியலாய் தாகம்

கால்வீக்கம் ஒருபுறம்
கண்பிரச்சனை மறுபுறம்
காலம் தான்பதில் கூற
காத்திருப்பாய் நானும்
காத்திருப்பாய் நானும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading