திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஓடும் வெண்ணிலவே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.25
ஆக்கம் 176
ஓடும் வெண்ணிலவே

வெண்ணிலவே
வெண்ணிலவே
விரைந்து ஏன்
ஓடுகின்றாய் ?

உன்னைத் தொட்டு
விடலாம் என்றல்லவோ
நானும் எட்டி எட்டி
நடக்கின்றேனே
நீயோ யாரும் தொட்டு
விடக் கூடாது என்று
வெட்டி வெட்டிப் போவதும் சரிதானோ

ஒரு சிலவேளை சீவிச்
சிங்காரித்து சிரித்தபடி
அழகு தேவதை போல்
வருகின்றாய்
சில நேரம் அழுத முகமுடன் அரைகுறை
ஆகத் திரிகின்றாய்

உனது அழகில் சொக்கி
நிற்கும் மாந்தரை விட்டு விட்டு ஓடிச் செல்வதும்
முறைதானோ ?

நீள்வான வெளியில்
மெல்ல மெல்ல நகர்ந்து
சென்று உன் அழகில் மயங்க வைக்கத் துரத்திச் செல்லும் சூரிய மன்னனோ உன்
வலையில் சிக்கக்
கூடாதென்று கீழ்
வானத்தில் உன் பார்வை படாது மறைந்து கொண்டதால்
அழுது முகம் சிவந்து
அரைகுறையானாயோ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading