பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஓடும் வெண்ணிலவே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.25
ஆக்கம் 176
ஓடும் வெண்ணிலவே

வெண்ணிலவே
வெண்ணிலவே
விரைந்து ஏன்
ஓடுகின்றாய் ?

உன்னைத் தொட்டு
விடலாம் என்றல்லவோ
நானும் எட்டி எட்டி
நடக்கின்றேனே
நீயோ யாரும் தொட்டு
விடக் கூடாது என்று
வெட்டி வெட்டிப் போவதும் சரிதானோ

ஒரு சிலவேளை சீவிச்
சிங்காரித்து சிரித்தபடி
அழகு தேவதை போல்
வருகின்றாய்
சில நேரம் அழுத முகமுடன் அரைகுறை
ஆகத் திரிகின்றாய்

உனது அழகில் சொக்கி
நிற்கும் மாந்தரை விட்டு விட்டு ஓடிச் செல்வதும்
முறைதானோ ?

நீள்வான வெளியில்
மெல்ல மெல்ல நகர்ந்து
சென்று உன் அழகில் மயங்க வைக்கத் துரத்திச் செல்லும் சூரிய மன்னனோ உன்
வலையில் சிக்கக்
கூடாதென்று கீழ்
வானத்தில் உன் பார்வை படாது மறைந்து கொண்டதால்
அழுது முகம் சிவந்து
அரைகுறையானாயோ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan