……கஞ்சா

மதிமகன்

……..கஞ்சா
———————
தலைக் கஞ்சா தலைவனும்,
தானைக் கஞ்சா சிப்பாயும்,
நிலைக் கஞ்சா நிலத்தோனும்,
நிம்மதி என்றும் இழப்பதில்லை!

மணாளனுக் கஞ்சா மனைவியும்,
மனைவிக் கஞ்சா மணாளனும்,
குணவானுக் கஞ்சா கொடூரனும்,
கூடிடில், கோணுமே நிம்மதி!

பெற்றோர்க் கஞ்சா பிள்ளையும்,
பெரியோர்க் கஞ்சா சிறியோனும்,
கற்றோர்க் கஞ்சா காடையனும்,
காசினியில் நஞ்சென வருமே!

அஞ்சுதற் கஞ்சா அறிவிலியும்,
ஆண்டவனுக் கஞ்சா அடியவனும்,
வெஞ்சமர்க் கஞ்சா வெறியோனும்,
வீழ்வதே பாரதன் விழுமியமாம்!

ஊருக் கஞ்சா உடையோரும்,
உணர்வுக் கஞ்சா உன்மத்தரும்,
போருக் கஞ்சா படையோரும்,
பொருதிடில், பூமியே துவளும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading