திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கணப்பொழுதில் ..

நகுலா சிவநாதன்

கணப்பொழுதில்

கணப்பொழுதில் மாற்றம் கடுகதி வேகம்
மனப்பொழுதில் எழுமே மாறுபடும்கோலம்
தினப்பொழுதும் தித்திப்பாய் எண்ணஅலை
திசையெங்கும் மாறுமே கணப்பொழுது வாழ்க்கை

காலமாற்றம் கடுகதி வேகம்
கரும்புகை குண்டுகளால் நிரப்பும் ஞாலம்
கோல அழகுக் கட்டிடமும்
சுக்குநூறாகும் சுடுகின்ற கொள்கலனால்

வெடிக்கின்ற சத்தம் வானைப்பிளக்க
வெந்தணல் கொழுந்துவிட்டெரிய
மாடிக்கட்டிடமும் மனையிழந்து வீழும்

கணப்பொழுதின் வண்ணம் காலச்சுழற்சியில்
கனவுகளும் சஞ்சரிக்கும்; காதலும் முகிழ்க்கும்
வனப்பொழுதும் பறவைகளால் வட்டமிடும்
வாஞ்சையாய் புதுமாற்றம் வந்திடும் நெஞ்சினில்

நகுலா சிவநாதன் 1812

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading