பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கணப்பொழுதில் ..

நகுலா சிவநாதன்

கணப்பொழுதில்

கணப்பொழுதில் மாற்றம் கடுகதி வேகம்
மனப்பொழுதில் எழுமே மாறுபடும்கோலம்
தினப்பொழுதும் தித்திப்பாய் எண்ணஅலை
திசையெங்கும் மாறுமே கணப்பொழுது வாழ்க்கை

காலமாற்றம் கடுகதி வேகம்
கரும்புகை குண்டுகளால் நிரப்பும் ஞாலம்
கோல அழகுக் கட்டிடமும்
சுக்குநூறாகும் சுடுகின்ற கொள்கலனால்

வெடிக்கின்ற சத்தம் வானைப்பிளக்க
வெந்தணல் கொழுந்துவிட்டெரிய
மாடிக்கட்டிடமும் மனையிழந்து வீழும்

கணப்பொழுதின் வண்ணம் காலச்சுழற்சியில்
கனவுகளும் சஞ்சரிக்கும்; காதலும் முகிழ்க்கும்
வனப்பொழுதும் பறவைகளால் வட்டமிடும்
வாஞ்சையாய் புதுமாற்றம் வந்திடும் நெஞ்சினில்

நகுலா சிவநாதன் 1812

Nada Mohan
Author: Nada Mohan