” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கணப்பொழுதில் ..

நகுலா சிவநாதன்

கணப்பொழுதில்

கணப்பொழுதில் மாற்றம் கடுகதி வேகம்
மனப்பொழுதில் எழுமே மாறுபடும்கோலம்
தினப்பொழுதும் தித்திப்பாய் எண்ணஅலை
திசையெங்கும் மாறுமே கணப்பொழுது வாழ்க்கை

காலமாற்றம் கடுகதி வேகம்
கரும்புகை குண்டுகளால் நிரப்பும் ஞாலம்
கோல அழகுக் கட்டிடமும்
சுக்குநூறாகும் சுடுகின்ற கொள்கலனால்

வெடிக்கின்ற சத்தம் வானைப்பிளக்க
வெந்தணல் கொழுந்துவிட்டெரிய
மாடிக்கட்டிடமும் மனையிழந்து வீழும்

கணப்பொழுதின் வண்ணம் காலச்சுழற்சியில்
கனவுகளும் சஞ்சரிக்கும்; காதலும் முகிழ்க்கும்
வனப்பொழுதும் பறவைகளால் வட்டமிடும்
வாஞ்சையாய் புதுமாற்றம் வந்திடும் நெஞ்சினில்

நகுலா சிவநாதன் 1812

Nada Mohan
Author: Nada Mohan