பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“கணப் பொழுதினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(458)

இக்கணம் எங்கேனும் இப் பூவுலகில்
ஒரு நொடிப் பொழுதினிலே
எதிர் பாரா ஏதோ ஓர் நிகழ்வு
நாளும் ஓர் அதிசயமாய்

செய்திகளும் சம்பவங்களும்
அதிர்ச்சியாய் ஆச்சரியமாய்
இன்பமாய் துன்பமாய்
ஏதாகிலுமாய்

உயிர் ஒன்று பிறக்க
உயிர்ஒன்று பிரியும்
புயலடித்தோயும்
பூகம்பம் நிகழும்

வான் வெளியினிலும்
கடல் பரப்பினிலும்
சாலை விபத்தினிலும்
நாளாந்தம் மடிவோரும்

ஏங்கித் தவிப்போரும்
அல்லலுற்றுழல்வோரும்
வையத்தில் வாடுவோரும் ஏராளமாக
ஒரு கணம் உனை வேண்டுகிறேன்
நிம்மதி தருவாயோ இறைவா!!!!!!!
நன்றி வணக்கம்…

Nada Mohan
Author: Nada Mohan