கமலா ஜெயபாலன்

தைமகளை வாழ்த்துவோம்
—————————————
வருவாய் தழிழ்மகளே வண்ணச் சிறப்பாய்
தருவாய் நலன்பல தந்து-கருவாகும்
நெல்மணிகள் ஓங்கியே நானிலமும் பொங்கிட
நல்கிடுவாய் நற்சீர் நமக்கு

ஏர்பிடித்தார் தந்தை எழுத்தும் அறிவித்தார்
பார்போற்றப் பக்குவமாய் படிப்பித்தார் -ஏர்பூட்டி
ஏழ்மை தெரியாமல் ஏற்ற உழவனாய்
வாழ்வை வளமாக்கியும் வாழ்ந்து

பொங்கலும் பொங்க பகலவன் தோன்றிடவும்
சங்கும் முழங்கி சொந்தங்கள்-பங்கேற்கும்
சுவையான நாட்களும் சுதந்திரமாய் வந்தால்
இவையனத்தும் இன்பமாகும் என்று

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading