பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

களவு

ராணி சம்பந்தர்

காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப் பலகிப்‌ பெருகிறது

நாலு பக்கமும் ஞாலங் காட்டுகிறது
நூலற்ற மெழுகுதிரியாயக் கண்கள்‌
மின்னி கால் பின்னிட கன்னமிடுகிறது

சொந்தமற்ற பொருளை ஏமாற்றிப்
பலாத்காரம் பிடுங்கியே எடுக்கிறது பறிக்கும் கொள்ளை ஆட் கடத்தல் ,
கொலை,வெட்டுக் குத்துச் தொடர

அள்ளியதில் குடியும் குதூகலமும்
கூத்தும் போதையும் கூடியாடுகிறது
சூளும் சூதுகள் வீழும் வரையிலும்

பாழும் அவர் மனம் மாறித் தேறாத
வரையிலும் ருசி கண்ட பூனைகளில்
களவு மாறாத அலங்கோல அவலமே.

Nada Mohan
Author: Nada Mohan