பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கான மயில்

ஜெயம் தங்கராஜா

கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட மனமும் முழித்தாட
அசைவால் மதுவூற உணர்வில் வெறியூற

தன்னை தொலைத்த புலவர்களைப் பாரீர்
கண்ணைத் தொலைத்த கலைஞனையும் பாரீர்
விரிக்கையிலே தோகை மெய்யுமிங்கு சிலிர்த்திட்டுமே
திரிகின்ற மேகத்தில் மழையும் துளிர்த்திட்டுமே

பச்சை வண்ண மரகத மேனி
இச்சை கொண்டோர் மனமோ தேனி
கனக அழகின் நடனத்தால் மெய்மறப்பு
நனவே கனவாகும் அற்புத சிறப்பு

பாதத்தை வைத்து தூக்கியும் நின்றாட
பாடியே கொண்டையை பாவலன் தனைமீற
மயிலின் மனமகிழ்ச்சி அழகியதோர் நிகழ்ச்சி
உயிரும் குதூகலிக்க ஆயுளிங்கு வளர்ச்சி

Nada Mohan
Author: Nada Mohan