நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

கான மயில்

ஜெயம் தங்கராஜா

கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட மனமும் முழித்தாட
அசைவால் மதுவூற உணர்வில் வெறியூற

தன்னை தொலைத்த புலவர்களைப் பாரீர்
கண்ணைத் தொலைத்த கலைஞனையும் பாரீர்
விரிக்கையிலே தோகை மெய்யுமிங்கு சிலிர்த்திட்டுமே
திரிகின்ற மேகத்தில் மழையும் துளிர்த்திட்டுமே

பச்சை வண்ண மரகத மேனி
இச்சை கொண்டோர் மனமோ தேனி
கனக அழகின் நடனத்தால் மெய்மறப்பு
நனவே கனவாகும் அற்புத சிறப்பு

பாதத்தை வைத்து தூக்கியும் நின்றாட
பாடியே கொண்டையை பாவலன் தனைமீற
மயிலின் மனமகிழ்ச்சி அழகியதோர் நிகழ்ச்சி
உயிரும் குதூகலிக்க ஆயுளிங்கு வளர்ச்சி

Nada Mohan
Author: Nada Mohan