” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கான மயில்

ஜெயம் தங்கராஜா

கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட மனமும் முழித்தாட
அசைவால் மதுவூற உணர்வில் வெறியூற

தன்னை தொலைத்த புலவர்களைப் பாரீர்
கண்ணைத் தொலைத்த கலைஞனையும் பாரீர்
விரிக்கையிலே தோகை மெய்யுமிங்கு சிலிர்த்திட்டுமே
திரிகின்ற மேகத்தில் மழையும் துளிர்த்திட்டுமே

பச்சை வண்ண மரகத மேனி
இச்சை கொண்டோர் மனமோ தேனி
கனக அழகின் நடனத்தால் மெய்மறப்பு
நனவே கனவாகும் அற்புத சிறப்பு

பாதத்தை வைத்து தூக்கியும் நின்றாட
பாடியே கொண்டையை பாவலன் தனைமீற
மயிலின் மனமகிழ்ச்சி அழகியதோர் நிகழ்ச்சி
உயிரும் குதூகலிக்க ஆயுளிங்கு வளர்ச்சி

Nada Mohan
Author: Nada Mohan