புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மூண்ட தீ!
அன்று அனுமன் இட்டதீ
ஆண்டாண்டு காலமாய் தொடருந்தீ
கானலாய் ஈழத்தைக்
கங்குலில் புதைக்குதே!
ஆணவம் அகந்தையின்
அடங்காப் பசியினால்
தேனெனும் மனிதத்தை
தினமெலாம் கருக்குது!

பூண்டோடு தமிழரைப்
புதைத்திடும் நோக்குடன்
மூட்டிய தீயதாய்
மூசியே எரியுது!
முடிவுரை இன்றியே
முத்திரை பதிக்குது
நாட்டிய இனவெறி
நங்கூரம் பாச்சுது!

மனிதத்தைத் தொலைத்திட்ட
மாக்களின் கரத்திடை
புனிதமாம் ஈழம்
பொசுங்கித் துடிக்குது!
பொறுப்புடை உலகமும்
போக்கற்று நிற்குது!

கீத்தா பரமானந்தன்29-05-23

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading