திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

குடும்பமெனும் சோலை

ரஜனி அன்ரன் (B.A) “குடும்பமெனும் சோலை“ 15.05.2025

குடும்பமென்பது சோலைவனம் – அங்கு
குதூகலம் வருமே தினம் தினம்
அமைதி தங்குமிடம் ஆரவாரம் பொங்குமிடம்
அன்பு விளையுமிடம் குடும்பமே
குடும்பமெனும் சோலையை வனப்பாக்க
குதூகலமாய் தந்ததே ஐ.நா.மன்றும்
குடும்பதினமாக வைகாசி பதினைந்தினை !

ஆலமர விழுதாக ஆணிவேராக
தலைமுறைகள் தழைக்கின்ற தளமாக
உறவுகளை இணைத்திடும் பாலமாக
உணர்வுகள் பொங்கிடும் மாடமாக
பிறவிப் பெருங்கடலின் தெப்பமாக
பிறப்பின் மகத்துவமாகுமே குடும்பமும் !

கட்டுக்கோப்பும் விட்டுக் கொடுப்பும்
இட்டுச் செல்லுமே நல்வாழ்விற்கு
உள்ளத்தின் அமைதி இல்லத்தில் தான்
இல்லத்தை அழகூட்டுவது குடும்பமே
குடும்பமெனும் சோலை என்றும் நந்தவனமே !

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading