பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி
———
முகமூடி அணிந்த வரே இன்று அதிகம்
முகமின்றிப் பாடுகிறார் பல பதிகம்
நல்ல முகங்களை நாளும் பார்க்கையில்
வெல்ல முடியவில்லை வேசமிட்ட
முகமூடியை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அறிவின் அளவு செயலில் தெரியும்
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் நஞ்சும் வைத்தால்
உத்தமர் எனப் பெயர் பெறலாமோ
இவரை நம்பி உள்ளக் கிடக்கையை கொட்டி
இகழ்ச்சிக்கு ஆளாகி அவமானப்பட்டு
இன்னோரன்ன வேதனை அனுபவிப்பது
முகமூடி அணிந்த முதுகெலும்பு அற்றவரினாலன்றோ
மக்களே முகமூடியைக் கழட்டுங்கள்
நல்ல முகங்களைக் காட்டுங்கள்
நல்லவராய் நானிலத்தில் வாழுங்கள்
நாடும் மக்களும் வீடும் நன்மை பெறட்டும்!
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan