சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

க.குமரன்

சத்தம் சிந்தும்

வாரம் 269

வசந்தம்

வசந்தத்தை
தேடுகின்றேன்
வாரி இறைத்து
வெள்ளத்தில்
மூழ்கிப் போன
இல்லத்தை
மீட்டு வைக்க
யாரால் கூடும்

ஆற்றின் அழகில்
மயங்கி
அருகில் வீடு
கட்டி
நாளும் ஒடும்
நீரின்
சலசலப்பில்
நாமும் எம்மை
மறந்தோம்

வானம் கிழித்துக்
கொட்டி
வராத. கோபமும்
வந்து
மேவி நிற்கின்றாய்
என் வீட்டை

கோபம் தனியுமா?
கொய்த என்
உடமைகளை
மீட்க வழி
கேட்டு
மீண்டும் தேடுகின்றேன்
வசந்தத்தை!…….

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan