க.குமரன்

சத்தம் சிந்தும்

வாரம் 269

வசந்தம்

வசந்தத்தை
தேடுகின்றேன்
வாரி இறைத்து
வெள்ளத்தில்
மூழ்கிப் போன
இல்லத்தை
மீட்டு வைக்க
யாரால் கூடும்

ஆற்றின் அழகில்
மயங்கி
அருகில் வீடு
கட்டி
நாளும் ஒடும்
நீரின்
சலசலப்பில்
நாமும் எம்மை
மறந்தோம்

வானம் கிழித்துக்
கொட்டி
வராத. கோபமும்
வந்து
மேவி நிற்கின்றாய்
என் வீட்டை

கோபம் தனியுமா?
கொய்த என்
உடமைகளை
மீட்க வழி
கேட்டு
மீண்டும் தேடுகின்றேன்
வசந்தத்தை!…….

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading