க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 81

விடியலி்ன் உன்னதம்

கலங்கின கண்களில்
ஆனந்த கண்ணீர்
காணமல் போனவர்கள்
விடுதலை பெற்றனர்

ஏங்கிய மனைவியும்
ஏங்கிய தாயும்
ஏங்கிய தந்தையும்
ஏங்கிய உறவுகளும்
உறவு கொண்டாடின

காணிகள் மீட்கபட்டன
கேட்டவை கிடைக்க பெற்றன
ஆனந்த ஈழத்தில்
அது அன்றோ
விடியலின் உன்னதம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading