இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்@
ஈரம்
*****
மொழிதனில் இருந்தது தாகம்
வழிவழி வந்தது மோகம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
நஞ்சினை உண்டவர் வீரம்
நெஞ்சினை நிறைக்குது பாரம்
அஞ்சன விழிகளில் ஈரம்!
விண்தனில் இருந்து வீழ்ந்தது
மண்தனில் ஓடி வழிந்தது
திண்ணைகள் பண்ணைகள் அழிந்தது
எண்ணங்கள் இன்னமும் ஈரம்!
தாய்நாடு வெகு தூரம்
வாய்தனில் ஊறுது காரம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
மண்தனை இழந்தது பாரம்
கண்களால் கண்டது கோரம்
எண்ணங்கள் காயாத ஈரம்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading