பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சாமினி துவாரகன்

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…

போர்வையை
விலக்க மனமின்றி
இறுக்கிப் போர்த்து
படுத்திருந்ததும்…

தண்ணீரை
அள்ளிக் குளிக்க
மனமின்றி
அரைமணி நேரமாய்
அலாசிக்கொண்டிருந்ததும் …

வழி ஓரம் கிடக்கும்
புல் நுனியில்
படர்ந்திருக்கும்
பனித்துளிகளை
தொட்டு இரசித்ததுவும்…

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…

சிவராத்திரிக்கு
கண் விழித்ததும்
மக நட்சத்திரத்தில்
மண் தொட்ட மாமனுக்கு
விஷேச அர்ச்சனை செய்ததும்…..

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது….

குறை மாதக்
குழந்தையே!
இன்னொன்றும்
ஞாபகம்
இருக்குறது…

அசடு வழியும்
காதலர்கள்
அடிக்கடி புலம்பும்
அந்த வார்த்தை
மாசி 14…..

-சாமினி துவாரகன் –
2025.02.04

Nada Mohan
Author: Nada Mohan