திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சாமினி துவாரகன்

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…

போர்வையை
விலக்க மனமின்றி
இறுக்கிப் போர்த்து
படுத்திருந்ததும்…

தண்ணீரை
அள்ளிக் குளிக்க
மனமின்றி
அரைமணி நேரமாய்
அலாசிக்கொண்டிருந்ததும் …

வழி ஓரம் கிடக்கும்
புல் நுனியில்
படர்ந்திருக்கும்
பனித்துளிகளை
தொட்டு இரசித்ததுவும்…

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது…

சிவராத்திரிக்கு
கண் விழித்ததும்
மக நட்சத்திரத்தில்
மண் தொட்ட மாமனுக்கு
விஷேச அர்ச்சனை செய்ததும்…..

இன்னும் எனக்கு
ஞாபகம்
இருக்கிறது….

குறை மாதக்
குழந்தையே!
இன்னொன்றும்
ஞாபகம்
இருக்குறது…

அசடு வழியும்
காதலர்கள்
அடிக்கடி புலம்பும்
அந்த வார்த்தை
மாசி 14…..

-சாமினி துவாரகன் –
2025.02.04

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading