பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 296 ]
[ வாரம் 296 ]
“முகமூடி”

மக்களை ஏமாற்ற முகமூடி அணிபவரும்
அவர்களைக்காப்பாற்ற மாறுவேடமிடுபவரும்
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றும் முகமூடியின் தோற்றம்
பொய் நன்மைதரின் உண்மையென கருதுவர் கற்றவர்

முகமூடி அணிந்தவர் அனைவரும் அல்லர் அயோக்கியர்
கொரோனா நோயிலிருந்து முகமூடி தந்தது பாதுகாப்பு
முகமூடிக்கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டியது அரசு
அரசே மக்களைச்சூறையாடினால் காப்பவர் எவரு?

முகமூடி தரித்தல் சரியா தப்பா யோசித்துபாரு
நாடு நல்லாயிருந்தால் முகமூடிக்கில்லை ஆபத்து
சீரழிந்து நடுரோட்டுக்கு வந்தால் முகமே இருக்காது முகமூடி தரிக்க
ஏமாறுபவர் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர் இருப்பர்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan