06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
வியாழன் கவி 2055
சூரன்போர்..
ஆறு நாட்கள் விரதம் இருந்து
அதர்மம் அழித்து தருமம் காத்த
அழகன் முருகனை வணங்கி
அல்லல் போக்கும் கந்தசஷ்டி..
பார்வதி மைந்தனாம் அழகனே
போர் புரிந்து சூரன் அவனை
சேவலும் மயிலுமாய் ஆக்கினான்
சேதியும் சொல்லும் கந்த சஷ்டி..
மயில்மேல் ஏறி உலகம் சுற்றி
ஆறுபடை வீடமர்ந்த முருகனே
தமிழ்க் கடவுளாம் வணங்குவோம்
மகிமை செப்பும் கந்த சஷ்டி..
குழந்தை வரம் வேண்டியே
குணமது பொறுமை காத்து
சஷ்டியிலே இருந்திடவே அகப்பையில்
வருமென்ற வாக்கு பலிக்கும் கந்த சஷ்டி
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.