திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
05-11-2024

அழியாத கோலங்கள்

பள்ளிக்காலமது பறந்தோட
புள்ளிக்கோலமது சிறகடித்து
அள்ளி குடும்பத்தைச் சுமந்து
அதுவே வாழ்வென நினைந்து!

சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
சோர்வில்லா கனவுமிருக்க
அனுபவமும் வண்ணமாய் மிளிர .
அழியாத கோலங்கள் மாறி

மங்கி பார்வை போனாலும்
மங்காத அறிவொளியாய்
எட்டி பிடிக்க கைகளுமற்று
எவர் உதவுவாரோ மனம் உற்று

புலனை முடக்கி நலனை அடக்கி
புலரும் பொழுதெல்லாம் ஏங்கி
முதுகெலும்பெல்லாம் வலி நரம்பாகி
முதுமை வலியின் உச்சமாகி

பிள்ளை வருகை பெருந்தவமாகி
பேச்சை தொலைத்த தொலைபேசியும்
பேசா மனங்களும் கண்டாள்
பேதை மூதாட்டி, கோலமும் அழகே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading