பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
05-11-2024

அழியாத கோலங்கள்

பள்ளிக்காலமது பறந்தோட
புள்ளிக்கோலமது சிறகடித்து
அள்ளி குடும்பத்தைச் சுமந்து
அதுவே வாழ்வென நினைந்து!

சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
சோர்வில்லா கனவுமிருக்க
அனுபவமும் வண்ணமாய் மிளிர .
அழியாத கோலங்கள் மாறி

மங்கி பார்வை போனாலும்
மங்காத அறிவொளியாய்
எட்டி பிடிக்க கைகளுமற்று
எவர் உதவுவாரோ மனம் உற்று

புலனை முடக்கி நலனை அடக்கி
புலரும் பொழுதெல்லாம் ஏங்கி
முதுகெலும்பெல்லாம் வலி நரம்பாகி
முதுமை வலியின் உச்சமாகி

பிள்ளை வருகை பெருந்தவமாகி
பேச்சை தொலைத்த தொலைபேசியும்
பேசா மனங்களும் கண்டாள்
பேதை மூதாட்டி, கோலமும் அழகே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan