21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61
11-03-2025
பங்குனி / பங்கு(நீ)
வசந்தத்தின் வாசல் பங்குனியே
வாழ்தலின் விரதமும் விழாவும் இம்மாதத்திலே
தமிழ் மாதங்களின் கடைக்குட்டியே
தமிழர் மனங்கள் பொங்குதே சந்தோஷத்திலே
புது வாழ்வின் ஆரம்பம் பங்குனியே
பசுமை பூக்கும் எங்கும் இனியே
புலம்பும் மனங்களில் துளிர் வருமே
பலவகை நோய்களும் அகலும் இங்கினியே
சூரியன் பயணம் மீனராசியிலே
சுமூகமான வாழ்வு தரும் மாதம் இதுவே
பங்குனி உத்திரம் தரும் புது நம்பிக்கை ஆன்மீக எழுச்சி
பல தெய்வ திருமணங்கள் இம் மாதத்திலே.
ஆண்டவன் படைப்பில் என் வாழ்வில்
அதிசயம் முதல் மகவு பங்குனியிலே
பொங்கி வரும் ஆனந்தம் என்ன சொல்ல
பேரனாந்தம் பங்கு நீ தந்தவனே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...