ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61

11-03-2025

பங்குனி / பங்கு(நீ)

வசந்தத்தின் வாசல் பங்குனியே
வாழ்தலின் விரதமும் விழாவும் இம்மாதத்திலே
தமிழ் மாதங்களின் கடைக்குட்டியே
தமிழர் மனங்கள் பொங்குதே சந்தோஷத்திலே

புது வாழ்வின் ஆரம்பம் பங்குனியே
பசுமை பூக்கும் எங்கும் இனியே
புலம்பும் மனங்களில் துளிர் வருமே
பலவகை நோய்களும் அகலும் இங்கினியே

சூரியன் பயணம் மீனராசியிலே
சுமூகமான வாழ்வு தரும் மாதம் இதுவே
பங்குனி உத்திரம் தரும் புது நம்பிக்கை ஆன்மீக எழுச்சி
பல தெய்வ திருமணங்கள் இம் மாதத்திலே.

ஆண்டவன் படைப்பில் என் வாழ்வில்
அதிசயம் முதல் மகவு பங்குனியிலே
பொங்கி வரும் ஆனந்தம் என்ன சொல்ல
பேரனாந்தம் பங்கு நீ தந்தவனே.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading