திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

கவி அழகு

கருவொன்றை கவி புனைய எடுத்து
உருவாக்கி வார்த்தைகளை சந்தங்களைத் தொடுத்து
உளத்தோடு பேசுகின்ற பாவொன்றின் வடிப்பு
உலகத்தில் அதுவன்றோ அழகான படைப்பு

அற்புதமாய் வரியமைத்து மொழி விளையாட்டு
சொற்றொடரில் கொப்பளிக்கும் கற்பனையின் கூட்டு
கவியெல்லாம் அழகாகும் புதுமைகளை சிந்திவிட
செவிநுழைந்து நெஞ்சைத்தொடும் வாசிப்பதை கேட்டுவிட

பாரதியார் கவிகளெல்லாம் கொண்டதென்ன எழில்
காரணம் அவருக்கு கவியெழுதுவதே தொழில்
வனப்பான கவிதைகளும் சிந்தையிலே தேங்கும்
கணக்கில்லா இரசிகர்களை ஈர்ப்பாலே உள்வாங்கும்

ஜெயம்
24-01-2025

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading