பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திசைகாட்டிகள்.

சிவருபன் சர்வேஸ்வரி

திசைகாட்டிகள்.

அன்பொடு அகரவரிசையில் ஆசையுடன் அணைத்து

அம்மா அப்பாவென அருட்கொடையை ஊட்டி

வண்ணமாகவும் வளமாக வரமுறையில் கற்பித்து

திண்ணமாக தரமாக தீர்க்கமாக மனதிலே

தெள்ளத் தெளியவைக்கும் திசைகாட்டிகளே வாழ்க

நன்னெறி வழிகாட்டி நல்நிலை தனைச்சேர்த்து

பலவழிகள் புரியவைக்கும் பண்பாளர்கள் நீவீர்

ஆடலுடன் பாடலும் அபிநயமும் விளையாட்டாய்

அகத்திலே ஏற்றவும் அரும்பாடு பட்டுமிங்கு

விளைநிலத்தைப் பதமாக்கி விதைப்பது போன்று

கல்வியென்னும் பயிர்வளரக் கவனிப்பாய் நின்றொழுகும்

கலைநிறைக் குருவே வாழி வாழி வாழியவே

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan