15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
திசை காட்டிகள்
ராணி சம்பந்தர்
03.10.24
ஆக்கம் 332
திசை காட்டிகள்
திசை காட்டியின் தீராத
தாகம்
திக்குத் தெரியாத சிறுவரைப் பள்ளியில்
பக்குவமாய்ச் சேர்த்து
பாரமெடுத்த பாகம்
ஊக்கமுடன் விழி மேல்
விழி வைத்து தூக்கம்
இன்றிய வேகம்
தாழ்வு மனப்பான்மை
நீக்கி வசதியின்மை
போக்கி வாழ்வின்
சோகம் மறைக்க
வேறு திசை திருப்பிய
தாகம்
சக்தியினால் புத்தகம்
வாசித்திடு
புத்தியினால் சித்தி
அடையத் தேடலில்
விளைச்சலிட்டு
உயர்ந்திடென
ஊட்டிய வழிகாட்டிகள்
சுயமரியாதையுடன்
தைரியமாய் உழைத்து
வாழ்வில் ஊன்றிட
நின்றிட்ட திசைகாட்டி
தெய்வங்களே எத்திசை
இருப்பினும் பாதந் தொட்டு போற்றிப்
புகழ் மாலை போட்டிடுவோமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...