திறனின்மேன்மை தீட்டும் குழந்தைகளே…..,,,

இரா.விஜயகௌரி

வரமென வாய்த்த வழித்தோன்றலிவர்
வைகறை விடியலில் ஆதவப் பேரொளி
நித்தியம் மலரும்நிமிர்ந்தெழும் ஆளுமை
வல்லமை நிறைந்த வைகறைக்குயில்கள்

பேதமை களைந்த பெருவெளிச்சங்கள்
பேணிக்காத்திடின் வல்லமைச்சுடரொளி
விடியலை எழுதிட வலிந்தெழும் கரங்கள்
வேண்டிக் காத்திடுயர்ந்தெழும் தோழமை

கடவுளின் கரங்களில்கரணையின் மனுக்கள்
காத்திரம் நிறைத்த சூத்திர தாரிகள்
அறிந்தால் புரிந்தால் அறிவின் பொக்கிஷம்
தெளிந்தவர்கண்களில். தேவதை வடிவம்

செயற்திறன் மிக்கசேவையின் மைந்தர்
பாமுகப் பந்தலின் பரவசத் தூதுவர்
கள்ளம் கபடம் இல்லாத மானிடர்
உணர்ந்து உரைத்தால் உயர்வின் திறனிவர்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading