நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன்

வணக்கம்

தை மகளே வருக
தைரியமும் தருக
தரணி போற்ற வருக வருக
தானியங்கள் பொலிக பொலிக.

பட்டினியை போக்க
பாரெல்லாம் விளைந்து நீ
வீடெல்லாம் நிறைந்து விதைத்தவன் மகிழந்து . மனமும் குளிர தை மகளே வருக வருக.

கோலமிட்டு. குத்து விளக்கேற்றி குடும்பங்கள் மகிழ்ந்து இருகை கூப்யே வரவேற்க நம்
இல்லம் வருக வருக தை மகளே!

பட்ட துயர் பறந்தே போக.
நோய் நொடிகள்
ஓடியே மறைய
பசி பட்டினி ஒழிக
திடம் கொண்ட
மனத்தோடு
தை மகளே நீ வருவாய்.

தை திங்களில்
புதிர் எடுத்து
புதுப் பானையில்
பொங்கி படைத்து மக்களும்
ஆவினங்களும்
ஆனந்தமாய் கொண்டாடி மகிழ தை மகளே தலை நிமிர்ந்து வா வா.

இளைஞரும் கூடியே காளை அடக்கி மாட்டு வண்டி சவாரி போட்டிகளும் போட்டு மகிழ பட்டாசு கொளுத்தி பண்புடனே வரவேற்று நிற்கிறோம்.

தை மகளே தலைநிமிர்ந்து. தையிரியமாக வா வா தைமகளே. இன்பம்
பொங்க இருளை நீக்கி
ஒளிகொண்டு
ஓடி வா வா

அதிபர். பாவை அண்ணா
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading