நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன்

வணக்கம்

தை மகளே வருக
தைரியமும் தருக
தரணி போற்ற வருக வருக
தானியங்கள் பொலிக பொலிக.

பட்டினியை போக்க
பாரெல்லாம் விளைந்து நீ
வீடெல்லாம் நிறைந்து விதைத்தவன் மகிழந்து . மனமும் குளிர தை மகளே வருக வருக.

கோலமிட்டு. குத்து விளக்கேற்றி குடும்பங்கள் மகிழ்ந்து இருகை கூப்யே வரவேற்க நம்
இல்லம் வருக வருக தை மகளே!

பட்ட துயர் பறந்தே போக.
நோய் நொடிகள்
ஓடியே மறைய
பசி பட்டினி ஒழிக
திடம் கொண்ட
மனத்தோடு
தை மகளே நீ வருவாய்.

தை திங்களில்
புதிர் எடுத்து
புதுப் பானையில்
பொங்கி படைத்து மக்களும்
ஆவினங்களும்
ஆனந்தமாய் கொண்டாடி மகிழ தை மகளே தலை நிமிர்ந்து வா வா.

இளைஞரும் கூடியே காளை அடக்கி மாட்டு வண்டி சவாரி போட்டிகளும் போட்டு மகிழ பட்டாசு கொளுத்தி பண்புடனே வரவேற்று நிற்கிறோம்.

தை மகளே தலைநிமிர்ந்து. தையிரியமாக வா வா தைமகளே. இன்பம்
பொங்க இருளை நீக்கி
ஒளிகொண்டு
ஓடி வா வா

அதிபர். பாவை அண்ணா
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan