பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நகுலா சிவநாதன்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நினைப்பதற்கு எண்ணம் மனதிலே வகுத்து
தினையது முளைப்பதாய் சிந்தனை முளைத்து
பனைபோலப் பெருகி பக்கவமாய் வளர்ந்து
மனைபோலக் கட்டுமே மாண்புமிகு சிந்தனை

சிந்தையின் நினைவும் சிதறும் எண்ணங்களும்
விந்தையாய் உலகில் வினைத்திறன் விளைவே!
சுந்தர வடிவ சுடர்விடும் எண்ணமே
மந்திர வடிவ மாண்புறு செயலே!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…..
மனதிலே மகிழ்வு மாற்றமாய் உருவாகும்
கனவிலே காரியம் காட்சியாய் பெருகும்
குதூகல மெங்கும் பூத்து விரியும்
கூடவே வரவுகளும் கொட்டி கிடக்கும்

நகுலா சிவநாதன் 1797

Nada Mohan
Author: Nada Mohan