“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

பசுமை

வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும் படரும்
புவிமகள் செப்பும்
தருக்களும் தளிர்க்கும்
தகமையில் தரணி
தன்னிலைக் கோலம்
தருமே சுகம்
பார்வைக்கு எழிலாய்
பசுமை உலகாய்
பூக்கும் புவியே
புத்தொளிர் எழிற்சி
புன்னகை மலர்ச்சி
எங்கும் பசுமை
ஏற்றத்தின் தகமை!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan