திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
31-10-2024

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பரவசம் குடிகொள்ளும்
பலகார படையலோடு
பலவகை ஆகாரமும்

உறவுகள் ஒன்று கூடி
உண்பதே எம்நாட்டில்
வெளிநாட்டு வாழ்க்கை
வேலைப் பளுவாகி

அருகாமை வீடெல்லாம்
அயல்நாட்டு உறவுமாகி
பண்டிகையும் தொலைத்து
பரதேசி ஆயாச்சு!

பண்டிகை தூய்மை
பலரின் மனங்களிலும்
படையல்கள் ஏழைவீட்டு
அடுப்பிலும் எரியட்டும்!

பஞ்சம் நீங்கி வாழ்வுமேம்பட
பல நெஞ்சம் ஏங்கி நிற்குதே
இப்பண்டிகை வந்தாலே
இன்பம் பொங்குமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading