பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பண்டிகை வந்தாலே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
31-10-2024

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பரவசம் குடிகொள்ளும்
பலகார படையலோடு
பலவகை ஆகாரமும்

உறவுகள் ஒன்று கூடி
உண்பதே எம்நாட்டில்
வெளிநாட்டு வாழ்க்கை
வேலைப் பளுவாகி

அருகாமை வீடெல்லாம்
அயல்நாட்டு உறவுமாகி
பண்டிகையும் தொலைத்து
பரதேசி ஆயாச்சு!

பண்டிகை தூய்மை
பலரின் மனங்களிலும்
படையல்கள் ஏழைவீட்டு
அடுப்பிலும் எரியட்டும்!

பஞ்சம் நீங்கி வாழ்வுமேம்பட
பல நெஞ்சம் ஏங்கி நிற்குதே
இப்பண்டிகை வந்தாலே
இன்பம் பொங்குமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan