பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பதில் ஒன்று கூறிடுமே

ராணி சம்பந்தர்

திலீபன் என்றாலே
தாய்த் திரு நாட்டின்
தியாகமென வீசுங்
காற்றே மூசிடுமே

பத்து மாதக் குழந்தை
தாய்ப்பால் கூடக் குடியாத
பாலகன் பார்த்திபன்
எம்முடன் கூடிக் செய்த
சின்னக் குறும்பு பேசிடுமே

தாய்மண் நேசித்த இலட்சிய
நாயகனே ! 5 கோரிக்கையிலே
15 ஆம் திகதி பட்டினிப் போராட்டம்

நல்லூர் முன்றலில் பல்லில் கூடப்
பச்சைத்தண்ணீர் படாது தொண்டை
வரண்டு 12 ஆம் நாள் உயிர் நீத்த
உத்தமனே தியாகி திலீபனே !

உன் மூச்சுக்காற்றே பல்கிப் பெருகி
எட்டுத் திக்கும் உலாவி வரும் வேளை
பதில் ஒன்று கூறி ஆசி தந்திடுமே .

Nada Mohan
Author: Nada Mohan