பள்ளிப்பருவத்திலே..

வசந்தா ஜெகதீசன்
பள்ளிப்பருவத்தில்..
சிட்டுக்களாய் பறந்து சிறகடித்த காலம்
சின்னவராய் கூடி குதூகலித்த நேரம்
வரவற்ற செலவும்
வனப்பு மிகு வாழ்வும்
நண்பர்களின் கூட்டும்
நாளும் விளையாட்டும்
பள்ளியின் பருவமாய் பாசத்தின்
பறவைகளாய்
பாடி மகிழ்ந்தோமே
துள்ளி திரிந்த துயரற்ற பருவம்
வாழ்வின் விருத்திக்கு வழியேடு சுட்டும்
அறியாத செயல்களும் ஆங்காங்கே முட்டும்
காலத்தின் தோழமை கலங்கரை விளக்காய்
ஞாலத்தில் பள்ளியின் பருவமே பசுமையின் இமயம்
துள்ளியே திரிந்திடும் துணிவிற்கு மகுடம்..
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading